நள்ளிரவில் வீடியோ கால்...ஓ.பி. ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர்  பாலியல் புகார்!

நள்ளிரவில் வீடியோ கால்...ஓ.பி. ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஏகாடூரை சேர்ந்த காயத்ரி தேவி அளித்துள்ள புகாரில், “நான் என் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். பள்ளிப் படிப்பை முடித்து நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.

அதன் காரணமாக அவ்வப்போது தொலை பேசியில் நாகபிரியாவுடன் பேசிக்கொள்வது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டு நாகபிரியாவின் தங்கையின் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகள் கவிதா; அவரது சகோதரர் ரவீந்திரநாத், அவரின் மனைவி ஆனந்தி ஆகியோரை நாகபிரியா அறிமுகம் செய்து வைத்தார்.

 அது முதல் கவிதா மற்றும் ஆனந்தி ஆகியோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு, அதன் மூலம் ஆனந்தி தோழியான மலரின் (பிரபல இயக்குநரின் மனைவி) நட்பு கிடைத்தது. அது முதல் நாகபிரியா, கவிதா, ஆனந்தி, மலர் ஆகியோருடன் நல்ல குடும்பம் போல் பழகி வந்தோம்.

அதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அவ்வப்போது சுற்றுலாவிற்கு செல்வது வழக்கம். இதனிடையே ரவீந்திரநாத் அவர்களுக்கும் மலருக்கும் தவறான தொடர்பு காரணமாக ரவீந்திரநாத் மற்றும் ஆனந்தி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அதன் காரணமாக ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

 இதனிடையே ரவீந்திரநாத்தின் கள்ளக்காதலில் மயங்கிய மலர், தனது கணவரான பிரபல இயக்குனரை விவாகரத்து செய்துவிட்டு ரவீந்திரநாத் அவர்களுடன் கள்ள உறவில் வாழ்ந்து வருகிறார்.

இந்த பிரச்சனை காரணமாக ஆனந்தியிடம் பேசிய போது, ரவீந்திரநாத் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனது முதல் சபலபுத்திகாரராக ஆகிவிட்டார் எனவும் பெண்கள் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும், தனது கணவர் மலருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும் என்னிடத்தில் கூறி வருத்தப்பட்டார்.

இதனிடையே எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2022 அண்டு விவாகரத்து ஆனது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரவீந்திரநாத். அவர்களின் எண்ணில் இருந்து எனது கை பேசி அழைப்பு வந்தது. ரவிந்தரநாத் அண்ணன் தான் பேசுகிறார் என்று எடுத்தேன்.

மறு முனையில் பேசியவர் தனது பெயர் முருகன் என்றும் தான் ரவீந்திரநாத் அவர்களின் நண்பர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் மேற்கூறிய நபர், ரவீந்திரநாத் அவர்கள் என் மீது ஆசைப்படுவதாகவும், என்னை ராணி போல் அவர் பார்த்துக் கொள்வார் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

அதற்கு உடன்பட மறுத்த என்னை மேலும் ரவீந்திரநாத்துடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் அதற்கு உடன்பட மறுத்தால், எனது குடும்பத்தையும் மற்றும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து ஆனந்தியிடம் சொன்னதும் அவர் தனது கணவரான ரவீந்திரநாத் அவர்களிடம் கேட்டபோது, யாராவது தனது கைபேசியை தவறாக பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்ததாக கூறினார். எனவே நானும் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரவீந்திரநாத் அவர்கள் நேரடியாக தனது கைபேசியில் இரவு 1 மணி வாக்கில் எனது தொலை பேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார், நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன்.

என்னைப் பற்றியும் எனது குடும்பம் பற்றியும் பேசத்தொடங்கிய அவர், ஒரு கட்டத்திற்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேசத் தொடங்கினார். என்னை பற்றியும் எனது உடலை பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் பேசினார்.

எனது கணவரை விவாகரத்து செய்து விட்டதன் காரணமாக தன்னுடன் உடல் உறவில் ஈடுபட வேண்டும் எனவும் அருவருப்பாக பேசினார். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உனது வீட்டிற்கு வரேன். இல்லை என்றால் அரசாங்க காரை அனுப்புகிறேன்.

ராணி மாதிரி வா உடலுறவில் ஈடுபடலாம் என்று 20 முறைக்கு மேல் கேட்க எனது காது கூசியது. நான் உங்கள் தங்கை போன்றவள் என்னிடத்தில் இவ்வாறு போசாதீர்கள் எனவும், நான் உங்களிடம் அண்ணன் என்ற முறையிலேயே பழகிவந்தேன். இது போன்ற என்னத்துடன் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று திட்டினேன். மரியாதையாக நான் சொன்னதைக் கேட்டு நட இல்லையேல் உன் குடும்பத்தினரை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேசத் தொடங்கினார். என்னை பற்றியும் எனது உடலை பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் பேசினார்.

 வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வரச் சொன்னதற்கான ஆதாரங்களும், நள்ளிரவை கடந்து வாட்ஸ் அப்பில் தனக்கு அவர் அழைத்து பேசியதற்கான ஆதாரங்களும் உள்ளது. ரவீந்திரநாத்தின் செயல்பாடு பற்றி அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் தாம் முறையிட்டேன். ஆனால் தமது பேச்சை கேட்கும் நிலையில் மகன் இல்லை எனச் சொல்லிவிட்டார்.

எனவே, வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். பதவி மற்றும் அதிகார பலத்தை கொண்டு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com