நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு
நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு

பல்லடம் செய்தியாளர் மீது தாக்குதல்: 62 இடங்களில் வெட்டு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியதில், அவர் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் நியூஸ்7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் பல்லடம், சூலூர் பகுதி செய்தியாளராக செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு கும்பல் ஒன்று நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், உடனடியாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேசபிரபுவின் உடலில் 62 இடங்களுக்கு மேல் வெட்டுகாயம் இருப்பதாகவும், நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்வதாக நேசபிரவுன் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நேசபிரவு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டிருந்தால் இந்த தாக்குதல் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்கின்றனர் நியூஸ் 7 ஊடகத்தினர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com