கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன்
கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன்

சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு- போலீஸ் விளக்கம்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அண்மையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பெரும் சர்ச்சை ஆன நிலையில், நகரின் பரபரப்பான வணிகத் தலமான கொத்தவால்சாவடியில் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை சார்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“ சென்னை, பிராட்வே. ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன் குற்ற வழக்குகளைக் கொண்ட முரளிகிருஷ்ணன் வயது/39, த/பெனகிராமன். என்பவர். கொத்தவால்சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதியப்பாதெரு- கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர். இன்று (10.11.2023) காலை 8.45 மணியளவில் அவர் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு, இந்தக் கோவிலுக்குள் சென்று கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார். உடனே, அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார்.” என்றும்,

”போலீசாரின் அதிகமான முதற்கட்ட மதுபோதையின் விசாரணையில், காரணமாக முரளிகிருஷ்ணன் தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் மீது கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வெடிமருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.” என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com