குஷ்பு
குஷ்பு

பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாது! – திடீரென விலகிய குஷ்பு

பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட வந்த நடிகை குஷ்பு, “தன்னால் தேர்தல் பிரச்சாரங்களை தொடர முடியாது” என பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜே.பி.நட்டாவிற்கு குஷ்பு எழுதியுள்ள கடிதம்

”நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019இல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன்.

ஜே.பி.நட்டாவுக்கு குஷ்பு எழுதியுள்ள கடிதம்
ஜே.பி.நட்டாவுக்கு குஷ்பு எழுதியுள்ள கடிதம்

இத்தகைய சூழலில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது. பிரச்சாரம் செய்தால் உடல்நிலையை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பா.ஜ.க.வின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் மருத்துவர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.

பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். அப்போது பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால நல்வாழ்வுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன்.

பிரச்சாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அதேவளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிக்க செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது.

இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பா.ஜ.க.வின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் தொடர்ந்து பிரச்சாரத்தின் ஒருபகுதியாக நான் இருப்பேன். உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்பதையும், நான் எங்கிருந்தாலும் சத்தமாக ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com