தமிழ் நாடு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வருகின்ற அக்போபர் 6 ஆம் தேதி இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் - செப். 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 17
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19
வாக்கு எண்ணிக்கை - அக். 9 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.