அமெரிக்க கிராண்ட் செஸ்-பிரக்ஞானந்தாவுக்கு விஜய் வாழ்த்து!

Praggnanandhaa
பிரக்ஞானந்தா
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற நடப்பு ஆண்டிற்கான கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தி :

"அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்." என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com