கரூர் செல்லும் விஜய்- 32 பேருக்கு அரசு வேலை தருகிறார்!

கரூர் நெரிசல்- விஜய்
கரூர் நெரிசல்- விஜய்
Published on

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்தியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் தொடர்புடைய குடும்பங்களில் 32 பேருக்கு நாளை அரசு வேலைக்கான ஆணைகளை வழங்குகிறார். இதையொட்டி அவர் நேரடியாக கரூருக்கே செல்கிறார். 

காலை 9 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்குப் புறப்படும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக கரூருக்குச் செல்கிறார்.

கரூர்- சேலம் புறவழிச் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

விஜய்யின் பயணத்தை முன்னிட்டு 6,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com