
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக, ஆட்சியர் ஆர். ஜெயாவுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காஞ்சிபுரத்தின் ஆட்சியர் பதவிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த. சினேகா நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், அம்மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த கு. ரவிகுமார், கரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம், மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.