தமிழ் நாடு
தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18-12-2024 புதன் காலை 10 மணியளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.