எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க. கூட்டணி முடிவு சரிதான் - எடப்பாடி உறுதி!

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியது சரிதான் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

சேலம் மாநகரத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நேற்று வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசுகையில், இக்கருத்தை பழனிசாமி உறுதிப்படுத்தினார்.

” பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய முடிவு நான் மட்டும் அல்ல, கட்சி நிர்வாகிகள் எல்லாரும் கூடி எடுத்த தீர்மானம். இரண்டு கோடி கட்சித் தொண்டர்களின் உணர்வை எதிரொலித்த முடிவு இது.” என்று அவர் குறிப்பிட்டார்.

“ பிரதமர் வேட்பாளர் யார் எனச் சொல்லி வாக்கு கேட்பீர்கள் என சிலர் கேட்கலாம். ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திராவில் எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டா வாக்கு கேட்டார்கள்? அந்தந்த மாநில உரிமைகளைப் பற்றிப் பேசி வாக்கு கேட்கிறார்கள்; நாமும் தமிழக மக்களின் உரிமைகளைப் பேசி வாக்கு கேட்போம். இந்த முறை வழக்கமான தேர்தலைப் போல அல்ல. சவாலான தேர்தலாக இருக்கும். அ.தி.மு.க. அணி வெற்றிபெற வேண்டும் என்றால் கட்சியினர் கடுமையாக வேலைசெய்ய வேண்டும்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com