இன்னும் இரண்டு நாள்களில் நல்ல செய்தி! – கமல்ஹாசன்

இன்னும் இரண்டு நாள்களில் நல்ல செய்தி! – கமல்ஹாசன்

“மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு நாள்களில் செய்தி வெளியாகும்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி:

தக் லைஃப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு இப்போது சென்னை வந்துள்ளேன். இன்னும் இரண்டு நாள்களில் நல்ல செய்தியுடன் சந்திப்பேன். நல்ல வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றவரிடம், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடப்போவதாக கூறுகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, சிரித்துக் கொண்டே “இன்னும் இரண்டு நாள்களில் சொல்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com