விஷ்வதர்ஷினி
விஷ்வதர்ஷினி

கோவை பெண் மீது குண்டர் சட்டம்!

காவல் துறையை அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த விஷ்வதர்ஷினி என்பவர் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி. இவர் ஃபேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த செலினா என்பவருடன் பழகி வந்துள்ளார். அவரிடம் தான் நடத்தி வரும் அறக்கட்டளையில் முதலீடு செய்தால், அந்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி, செலின் 50 ஆயிரம் ரூபாயை விஸ்வதர்ஷினியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை திரும்பத் தராததால், செலினா சந்தேகமடைந்து கேட்டபோது, அவரை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் விஸ்வதர்ஷினி.

இது தொடர்பாக செலினா அளித்த புகாரின் பேரில், கடந்த மே 8ஆம் தேதி விஸ்வதர்ஷினி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, விஷ்வதர்ஷினி கோவை காவல்துறைக்கு எதிராக பொது மக்களைத் தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும், பேசிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரில் மீண்டும் செல்வபுரம் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே விஷ்வதர்ஷினி மீது போக்சோ உட்பட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர் கோவை மாநகர காவல்துறையினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com