கருக்கா வினோத்
கருக்கா வினோத்

கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்காக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று வினோத் தெரிவித்தார்.

இந்த நிலையில், வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com