பசுமைப் பந்தல்
பசுமைப் பந்தல்

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு பசுமைப் பந்தல்!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடும் வெயிலில் வாகன ஒட்டிகள் சிக்னலில் காத்திருக்கும்போது ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தேவைப்படும் இடங்களில் பசுமைப் பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, புதுச்சேரி, மதுரை போன்ற இடங்களில் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com