மழை
மழை

இன்று கன மழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்!

தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று இலேசான, இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 10 இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1முதல் 6ஆம் தேதிவரை இலேசான, மிதமான மழை பெய்யும் என்றும் முன்னறிவித்துள்ளது.

தென் தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி வீசக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இரு நாள்களும் மீனவர்கள் அங்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com