பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் தாய்ப்பால்
பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் தாய்ப்பால்

தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் நடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலேயே அமைந்திருக்கும்.

இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக தனியார் மூலமாகவும் தாய்ப்பால் விற்பனை நடந்து வருகிறது. வர்த்தக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, உணவுத் துறை, மருத்துவத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கே.கே.ஆர் கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவரின் கடையில், 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில், புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com