இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்துள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என தெரிவித்துள்ள ப.சிதம்பரம், எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தெடார்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷியாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை.
எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.