சும்மா சொல்லாதீங்க! அமைச்சர் சிவசங்கர் காட்டம்!

சும்மா சொல்லாதீங்க! அமைச்சர் சிவசங்கர் காட்டம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

"கடந்த இரண்டு நாள்களாக எதிர்க்கட்சி தலைவரும் இன்னும் சில கட்சித் தலைவர்களும் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு நேரத்தில் எப்பொழுதுமே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவு 11:30 மணிக்கு மேல் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என உரிமையாளர்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்." என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com