தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

மக்களவைத் தேர்தல்: 5 மாநிலங்களில் வி.சி.க. போட்டி! - திருமா

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி ஐந்து மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் வி.சி.க.வுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியது:

“தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வி.சி.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். ஆகவே, விசிகவுக்கு சுயேட்சை சின்னத்திலிருந்து பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுத் தலைவருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும், அதனைக் கைவிட வேண்டும் எனவும் வி.சி.க. சார்பில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. “என்று திருமாவளவன் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com