செய்தியாளர்களை முதல்வர் சந்திக்க வேண்டியதில்லை- நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்
Published on

செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருக்கிறார். 

மதுரையில் இன்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

செய்தியாளர்களைச் சந்திப்பது எனும் அளவுகோலைக் கட்டாயப்படுத்த வேண்டாம்; எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திப்பார்; அவர் மக்களைத் தொடர்ச்சியாக சந்தித்தபடி இருக்கிறார் என்றார் நிர்மல். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைதிதான் முக்கியம்; இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் என்ன நிலை இருந்ததோ அதுவே தொடரவேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com