தமிழ் நாடு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மாநிலக் கல்வித் திட்டத்தில் உள்ள பள்ளிகள் வரும் 1ஆம் தேதி திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதே சமயம், முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி அன்றுதான் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன் தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இதைத் தெரிவித்தார்.
புதிய பாடப் புத்தகங்களையும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.