செந்தில் பாலாஜி - சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜி - சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமின் மனு- நாளை விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றபின் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் பிணை மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com