ஒரே தேர்தல் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் - மு.க.ஸ்டாலின்

CM M.K. Stalin
மு.க.ஸ்டாலின்
Published on

’ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:  

”கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையினை ஏற்படுத்தும்!

எழுக இந்தியா!

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம்!” என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com