தமிழ் நாடு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த அக்கட்சியின் முப்பெரும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :
”தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று மாலையில், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.