“கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது…!”

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on

"கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது." என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல்.

தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே!” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com