
அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க.விலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமை தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கும் என்று அவர் பெரிதும் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது கிடைக்காததால் அவர் கடும் ஏமாற்றம் அடைந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமன்றி, அவரது மகனையும் தி.மு.க. தலைமை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தொடர் அதிருப்தி காரணமாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிடலாமா என்பது குறித்து தனது தீவிர ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.