ஓ.எஸ். மணியன்
ஓ.எஸ். மணியன்

ஓ.எஸ். மணியன் வெற்றி செல்லும்! – நீதிமன்றம் தீர்ப்பு

வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ். மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழங்கப்பட்ட தீர்ப்பில், வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com