தமிழ் நாடு
கடந்த தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் அண்மையில் விமர்சித்திருந்தார். அடுத்தடுத்த கூட்டங்களில் ஆவேசமாக அவர் இதைக் குறிப்பிட்டு, தி.மு.க.தான் கூட்டணிச் சிக்கலுக்குக் காரணம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவரிடம் திருமாவின் பேச்சைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், நாளைமறுநாள் இதைப் பற்றி விளக்கம் அளிப்பதாகக் கூறினார்.