ராகுல் காந்தி
ராகுல் காந்தி

12ஆம் தேதி இராகுல்காந்தி கோவையில் பிரச்சாரம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி பிரச்சாரத்துக்காக வரும் 12ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார். கோவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார். கோவை, செட்டிப்பாளையத்தில் இராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்துக்காக மேடை அமைக்கப்படுகிறது. 

முன்னதாக, நேற்று கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இராகுல் காந்தி தாக்கல்செய்தார். அவருடைய சகோதரி பிரியங்காவும் அப்போது உடனிருந்தார். இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் ஆனி ராஜா இடதுசாரி முன்னணி சார்பில் அங்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com