அன்புமணியுடன் கூட்டணி பேசியது சட்டவிரோதம்- இராமதாஸ்

இராமதாஸ்
இராமதாஸ்
Published on

பா.ம.க. சார்பில் அன்புமணியுடன் கூட்டணி பேசியது சட்டவிரோதம் என்று அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுடெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு இராமதாசு மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். 17.12.2025 முதல் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “ இராமதாசு மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி இராமதாசு மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com