தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30இல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com