மெயின் அக்யூஸ்டு ஆதவ் அர்ஜூனா- ஆர்.எஸ்.பாரதி ஓவர் காட்டம்!

R.S.Bharathi
ஆர்.எஸ். பாரதி
Published on

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முதன்மைக் குற்றவாளியாக (மெயின் அக்யூஸ்டாக) இருந்துகொண்டு, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசுகிறார் என்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாகக் கூறினார். 

அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டதை அடுத்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.  

பொறுப்பற்ற முறையிலும் தமிழ்நாட்டு மக்களை ஆத்தீரமூட்டும்படியாகவும் அமைச்சர் பேசியதாக பாரதி கூறியுள்ளார்.

கரூர் விவகாரத்தில் தன் தலைவரைப் பற்றி பெருமைபேசிக்கொண்டதுடன், முதலமைச்சர் விஜய்யைக் குறையாகவும் அவர் பேசினார்.

வழக்கின் விசாரணையைக் கெடுக்கிற வகையில் ஒரு (குற்றம்சாட்டப்பட்டவர்) அக்யூஸ்டு நேற்று அ.தி.மு.க.வினர் இணைப்புவிழாவில் பேசியிருக்கிறார்; இதனால் ஆதவ் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்; மேலும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பும் தொடுக்கவுள்ளோம் என்று பாரதி சொன்னார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com