சாரல் மழை
சாரல் மழை

சென்னையில் ஆங்காங்கே சாரல் மழை!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு, அரும்பாக்கம், வளசரவாக்கம், கே. கே. நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மாடம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் லேசான மழை விட்டுவிட்டு பெய்தது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்ததால், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com