வடலூர் வள்ளலார் பெருவெளி
வடலூர் வள்ளலார் பெருவெளி

வடலூர்ப் பெருவெளி போராட்டம்- தடை, கைது... சீமான் கண்டனம்!

வடலூர் வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் பன்னாட்டு மையம் அமைக்கும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதை எதிர்த்து அந்த இடத்தை வள்ளலார் பெருவெளிக்காக வழங்கிய விவசாயிகளும் பா.ம.க.வினரும் எதிர்த்துவருகின்றனர். இன்று நா.த.க.வும் சில அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருந்தன. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாகக் கூறி காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நா.த.கட்சியினர் ஆங்காங்கே கைதுசெய்யப்பட்டனர். 

இதுகுறித்து நா.த.கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப்பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுத்திருப்பதோடு, தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனைம் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.” என்று கூறியுள்ளார். 

”தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும் தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும்.” என்றும் சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com