‘தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்…’ - அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் தொடக்கம்!

அண்ணாமலை ரசிகர் மன்றம் தொடக்கம்
அண்ணாமலை ரசிகர் மன்றம் தொடக்கம்
Published on

சேலம் மாவட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு முதல் முறையாக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரி பணியாற்றிய அண்ணாமலை தனது பதவியை 2020ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். பின்னர் தமிழ்நாடு மாநில பாஜக பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 இல் பாஐக மாநில தலைவரானார். 2025, ஏப்ரல் 11ஆம் தேதி வரை அப்பதவியில் தொடர்ந்தார்.

பாஜக சார்பில் அண்ணாமலை 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவர் 2023இல் ’என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து 2025, ஏப்ரல் 12ம்தேதி பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக, சினிமா மோகத்தை தாண்டி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அப்பகுதியில் உள்ள ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் அரசியலில் சூப்பர் ஸ்டார் K.அண்ணாமலை Ex.IPS, ரசிகர் மன்றம், ஆணைப்பள்ளம், பக்கநாடு என்றும், ரசிகர் மன்றத்தின் தலைவர் A.T.தங்கமணி, இயக்குநர் மற்றும் ரசிகர் மன்றத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com