சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

தேர்தலைப் புறக்கணிக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை! – சத்யபிரதா சாகு

தேர்தலைப் புறக்கணிக்கும் ஏகனாபுரம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர்.

ஏகனாபுரம் கிராமத்தில் தபால் வாக்குகளும் இதுவரை ஏதும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தேர்தலைப் புறக்கணிக்கும் ஏகனாபுரம் கிராம மக்களுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்துவார்.

தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை பின்னரும் தேர்தலை ஜனநாயக நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது" என்று சத்யபிரதா சாகு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com