தமிழ் நாடு
நாளைமறுநாள் 9ஆம்தேதி முதல் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
9, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாள்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
வடக்கு உள் தமிழகத்தின் வெப்பநிலை தொடர்ந்து வறட்சியாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.