பங்காரு அடிகள் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
பங்காரு அடிகள் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

பங்காரு அடிகள் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் குரு பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேல்மருவத்தூரில் சக்தி பீடத்தில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று காலை 8:30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

அடிகளாரின் மனைவி, குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com