தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு- மார்ச் 26 முதல் நேர்காணல்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல் தொகுதி முதன்மைத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், சார் பதிவாளர் உட்பட்ட குரூப் 1 எனப்படும் முதல் தொகுதிப் பணியில் 97 பணியிடங்களுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. 2 ஆயிரத்து 113 பேர் அந்தத் தேர்வை எழுதியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்பதால் போட்டியாளர்கள் முதன்மைத் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று முதன்மைத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது.

இம்மாதம் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com