தமிழ் நாடு

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தேர்தல் பயணத் திட்டங்களை வடிவமைத்துத் தந்த செங்கோட்டையன், முதல் முறையாக த.வெ.க. ஆளுங்கட்சியான பிறகு தேர்தல் பணியில் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் முன்வரிசை அமைச்சர் ஆனந்தும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் முன்னாள் அ.தி.மு.க., பா.ஜ.க. புள்ளியான சிடிஆர் நிர்மல்குமாரும் கண்காணிப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனந்துக்கு வரிசையில் முதலிடமும் செங்கோட்டையனுக்கு இரண்டாமிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ச்சுனாவும் தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அருண்ராஜும் பொறுப்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.