அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்! – ஜெயக்குமார் விளக்கம்

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்! – ஜெயக்குமார் விளக்கம்

தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க.வினுடையது இருக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க. அண்மையில் நான்கு முக்கிய குழுக்களை அறிவித்தது. தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு, தேர்தல் விளம்பரக் குழுக்களில் யார் யார் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் நத்தம் விஸ்வநாதன்,பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை உள்ளிட்ட 10 பேர் இடம்பிடித்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழு இன்று ஒன்று கூடி அதன் பணிகளை தொடங்கியுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் நலனை, நாடித்துடிப்பை, எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

தி.மு.க. போன்று மாநில உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்காமல், மாநிலத்தின் உரிமைகளைக் காக்கின்ற தேர்தல் அறிக்கையாக இருக்கும்.

2021 ஆம் ஆண்டு தி.மு.க. வழங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் ஏமாந்து விட்டனர். இனி எதற்கும் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தெரிய வரும்.” என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com