தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆ ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3- ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி 27-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாகும் என்றும் பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.