அரசுப் பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம் 19ஆம் தேதிவரை இடைநிறுத்தம்!

அரசுப் பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம் 19ஆம் தேதிவரை இடைநிறுத்தம்!

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்துவந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வரும் 19ஆம்தேதிவரை இடைநிறுத்தம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்றத்தில் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று காலையில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த உரிமையில் தாங்கள் தலையிடவில்லை என்றும் விழா நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வதை தொழிலாளர் சங்கங்கள் தவிர்க்குமாறும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com