நெல்லை பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “ தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த 27-07அன்று திருநெல்வேலியில் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக கவினின் தாயார் கொடுத்த புகார் மனுவின்படி பாளையங்கோட்டை காவல்நிலைய குற்ற எண் 396/2025 சட்டப்பிரிவுகள் 296(பி), ,49, 103(1), BNS உடன் 3(1) ஆர், 3(1)எஸ், 3(2)வி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித், அவரின் தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்பப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்டவரும் சாட்டப்பட்ட சர்ஜித்தின் சகோதரியும் பழகிவந்த நிணையில் இது தொடர்பான பிரச்சனையில் இக்கொலை நடத்துள்ளதாகத் தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை, தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் சார்பு ஆய்வாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமில்லாமலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடப்பதை உறுதிசெய்யும் வகையில் இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் சுதந்திரமான நியாமான, பாரபட்சமற்ற விசாரணையை உறுதிசெய்வதற்காக இந்த வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை-சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.