இராஜ்நாத்சிங் இலங்கைப் பயணம்- வீரபாண்டியன் வேண்டுகோள்

மு. வீரபாண்டியன், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர்
மு. வீரபாண்டியன், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர்
Published on

இலங்கைக்குப் பயணம்செய்யும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத்சிங், கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இதுகுறித்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“ இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செப்டம்பர் 8 முதல் 10 வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இலங்கை தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் உட்பட தனிப்பட்ட உடைமைகள் பறிக்கப்படுவதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், இப்பிரச்னைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத்சிங் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.” என்றும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com