தமிழ் நாடு

முதுபெரும் பெரியாரியல்வாதியும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னைய தலைவருமான ஆனைமுத்துவின் நூல்கள் அவரது மறைவுக்குப் பிறகு நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
இதற்காக அவரின் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இந்நிதியை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதற்காகக் குரல்கொடுத்த சட்டப்பேரவை வி.சி.க. உறுப்பினர் ஆளூர் சா நவாசும் உடனிருந்தார்.