எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எஸ்.ஐ.ஆர்.தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்தது உண்மைதான்!

எஸ்.ஐ.ஆர். என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது.  

செங்கோட்டையன் சொன்னபடி, என் மகனையோ மருமகனையோ எங்காவது பார்த்திருக்கிறீர்களா என செய்தியாளர்களிடம் எதிர்க்கேள்வி. 

என் மீது அரசியல்ரீதியாகப் பேசமுடியாமல் இதைப் பிடித்துக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். முதிர்ந்த அரசியல்வாதி இப்படி செய்யலாமா?

நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்காமல் இருப்பது பிரச்னை. மத்திய பணியாளர் தேர்வாணைய விதிப்படி செய்யவில்லை. 

போதைப்பொருள் அதிகமானதால் குற்றங்கள், கொலைகள் நடக்கின்றன. 

நிதியை ஒதுக்காமல் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.  

முதலமைச்சர் சொன்னபடி செய்திருந்தால் 25 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்; அப்படி நடக்கவில்லை.

தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். அமைச்சர் வெள்ளை பேப்பரைக் காட்டுகிறார். அவ்வளவுதான் இருக்கிறது.  

அ.தி.மு.க.வைக் குறைகூற முடியாமல் பா.ஜ.க.வைப் பற்றி பேசுகிறது, தி.மு.க.

logo
Andhimazhai
www.andhimazhai.com