சட்டப்பேரவைத் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தல்வடிவமைப்பு - எஸ்.கார்த்தி

கல்யாணத்துக்குகூட பணம் கொண்டு போகமுடியல.. என்ன இது? - தேர்தல் ஆணையத்தில் புகார்!

மக்களவைத்தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் திருமண, வணிக செலவுகளுக்குப் பணம் எடுத்துச்செல்பவர்களிடம் அதிகாரிகள் அந்தத் தொகையை வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். ஒரு வாரத்துக்கும் மேல் மாநிலம் முழுக்க பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் நா. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

“ தேர்தல் ஆணையம் மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளது. இது வணிகர்களையும், பொது மக்களையும் கடுமையாக பாதிக்கிறது.

ஏப்ரல் 19 வரை வணிக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். திருமணம் உட்பட்ட சில சமூக காரியங்களும் தடைபடுவதாகவும் தகவல் வருகின்றன.

வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டு வரும் இடையூறுகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று, வழிப்பயணத்தில் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துச் செல்லும் வகையில் மாதிரி நடத்தை விதியில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.” என்று பெரியசாமி கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com