காதல் திருமணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது.
அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஆணவக் கொலைகள் - குற்றங்களுக்கு எதிரான சமூகநீதிக் கருத்தரங்கில் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.