நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

குடிபோதை பாதிப்பை முதல்வர் கவனிப்பாரா?- பா.ஜ.க. துணைத்தலைவர் கேள்வி!

கடந்த இரு வருடங்களில் நூற்றுக்கணக்கான மதுபோதைக் கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும் ஆனால் இவற்றைத் தடுத்துநிறுத்த முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சுமத்தியுள்ளார்.

மதுபோதையால் நிகழ்ந்த கொலைகளில் ஒரு சிலவற்றை அவர் பட்டியலிட்டுள்ளார்.

“ மது அருந்த பணம் தராத தந்தை கொலை; பட்டதாரி இளைஞர் கைது : 24/02/2022.

மது போதையில் தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற பாசக்கார மகன் கைது : 16/03/2022.

இரண்டு மகள்கள் அடித்து கொலை : குடிகார தந்தையின் வெறிச்செயல் : 20/05/2022.

மது போதையில் அடித்து துன்புறுத்திய தந்தை : டாக்டர் மகள் தற்கொலை : 29/011/2022.

மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொன்று புதைத்த மகன் கைது : 09/11/2022.

மது போதைக்கு அடிமையான வாலிபர் கொலை, பாசக்கார தம்பி, தந்தை கைது : 09/11/2022.

மது பழக்கத்தினால் மனைவி பிரிந்ததால், சோற்றில் விஷம் வைத்து தாய், தந்தையை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

போதையில் குழந்தையை சுவரில் வீசி கொலை செய்த கொடூர தந்தை : 05/01/2023.

குடிகார மகனை குடும்பமே அடித்து கொன்றது : 08/03/2023.

மதுரையில் மது போதையால் ஆள்மாற்றி கொலை செய்த இருவர் கைது : 26/10/2023.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் குடிபோதை விபத்து, கொலைகளில் 20 பேர் பலி : தீபாவளி வியாபாரம் அமோகம் : 15/11/2023.

வயலில் மது அருந்தியதை தட்டி கேட்ட விவசாயி கொலை : 5/01/2024.

சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் - 11/01/2024.

மது விற்பனையில் தகராறு : கத்தியால் குத்தி ஒருவர் கொலை. 17/01/2024.

மது பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்த மகன், தாயின் மீது சந்தேகப்பட்டு கொலை : 19/01/2024.

மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி கொலை : கணவன் கைது: 28/01/2024.

மது போதையில் இளைஞர் கொலை : நண்பர் கைது 30/01/2024.

ஆனால், இந்த படுகொலைகளுக்கு காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம் தான் தமிழகத்தின் சாபக்கேடு. பல இளம் விதவைகள், பெற்றோரில்லா குழந்தைகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள்.

டாஸ்மாக்கிலிருந்து வாங்கி அருந்தும் மதுவிற்கு பலியாவது பெரும்பாலும் சராசரியாக 30-45 வயது உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைகளை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவர்கள் முயலவுமில்லை.

ஆனால், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுவது கண்டிக்கத்தக்கது. முறைப்படுத்த வேண்டியதை முறைப்படுத்த முயலாமல், முறைப்படுத்தக் கூடாததை முறைப்படுத்திக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலா?

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் என்ற வள்ளுவரின் வாக்கை நினைவில் கொண்டு செயல்படுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?” என்று நாராயணன் திருப்பதியின் அறிக்கையில் கூறப்ப்ட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com